பறவாயில்லை முகமூடியோடையே வரலாம் வாங்கோ...! நான் வாசித்தவை, யோசித்தவை, நினைவுகள், நிஜங்கள் என்பவற்றோடு..உங்கள் கருத்துக்களும் இங்கு தூறல்களாக...

Friday, 25 May 2007

படமும்...கவியும் 2



சுதந்திர காற்று..!

வீசத்தொடங்கிற்று
58 வருடங்களுக்கு முன்னால்....
ஆனாலும் நாம்
சுவாசித்ததில்லை ஒரு நாள் ......!!

Thursday, 24 May 2007

படமும்...கவியும்..



எங்கே
பறிக்கப்படாமலே இருந்து விடுவமோ
என்றெண்ணி
பூவையவள்...
பூவானாளோ.....

இல்லை..

எங்கே
பறிக்கப்பட்டு விடுவமோ
என்றெண்ணி
பூவது...
பூவையானதோ....

............


மலர் என மறைத்தால்
கசக்கி விடுவார்களோ என பயந்து...
மணலுக்குள் மறைத்தேன்
என் காதலை....
அழித்து விடுவார் என்பதை மறந்து........

Thursday, 17 May 2007

பூ மலர்ந்தது..

மலரும் வலைப்பூவாய் உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. உங்களை அறியாமலே உங்கள் பலரின் வாசகியாக நான் இருந்திருக்கிறேன்! இருக்கின்றேன்! அந்த அழகான வாசனைகள், வண்ணங்கள் கொண்ட வலைப்பூக்களை பார்த்தே எனக்கும் ஒரு நப்பாசை. என்னையும் உங்கள் நந்தவனத்தில் சேர்த்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்..... என்னோட முதல் ஆக்கமாக எனக்கு ரொம்ப பிடித்த மூன்று பாடல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

வாழ்க்கை என்றால் போராட்டம்! இது நான் சொல்லலை. அது எல்லோருக்குமே தெரியும். அதை போராடி தான் வெல்லணும்..இதுவும் நான் சொல்லலை. இது வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லோருக்குமே புரியும் ஒன்று. ஆனாலும் சில சமயங்களில் மனம் சோர்ந்து விடுவதுண்டு. அந் நேரத்தில் நம்மை ஆதரிக்க ஒருவர் பக்கத்தில் இருந்தால் ஆறுதலாக இருக்கும். அப்படி நம்மை ஆறுதல் தரும் ஒன்று " இசை" என்றால் அது பொய்யில்லை. சந்தோசமாயினும் சரி, கவலையாயினும் சரி பிடித்த இசையை.. மனதிற்கு உற்சாகம் தரும் அல்லதும் இதம் வரும் வரிகளோடு...பிடித்த பாடகரின் குரலோடு..கேட்டால் மனதிற்கு இதமாக இருக்கும்....!!

இப்படி எனக்கு ரொம்ப பிடித்த பாடல்கள் இவை. நீங்களும் கேட்டுப்பாருங்கள்..

படம்:அமராவதி
பாடியவர்:மின்மினி
இசை: பாலபாரதி



படம்:பூவெல்லாம் கேட்டுப்பார்
பாடியவர்: ஸ்ரீநிவாஸ்
இசை:யுவன்சங்கர்ராஜா



படம்: பம்பாய்
பாடியவர்: அனுபாமா
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்