மலரும் வலைப்பூவாய் உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. உங்களை அறியாமலே உங்கள் பலரின் வாசகியாக நான் இருந்திருக்கிறேன்! இருக்கின்றேன்! அந்த அழகான வாசனைகள், வண்ணங்கள் கொண்ட வலைப்பூக்களை பார்த்தே எனக்கும் ஒரு நப்பாசை. என்னையும் உங்கள் நந்தவனத்தில் சேர்த்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்..... என்னோட முதல் ஆக்கமாக எனக்கு ரொம்ப பிடித்த மூன்று பாடல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
வாழ்க்கை என்றால் போராட்டம்! இது நான் சொல்லலை. அது எல்லோருக்குமே தெரியும். அதை போராடி தான் வெல்லணும்..இதுவும் நான் சொல்லலை. இது வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லோருக்குமே புரியும் ஒன்று. ஆனாலும் சில சமயங்களில் மனம் சோர்ந்து விடுவதுண்டு. அந் நேரத்தில் நம்மை ஆதரிக்க ஒருவர் பக்கத்தில் இருந்தால் ஆறுதலாக இருக்கும். அப்படி நம்மை ஆறுதல் தரும் ஒன்று " இசை" என்றால் அது பொய்யில்லை. சந்தோசமாயினும் சரி, கவலையாயினும் சரி பிடித்த இசையை.. மனதிற்கு உற்சாகம் தரும் அல்லதும் இதம் வரும் வரிகளோடு...பிடித்த பாடகரின் குரலோடு..கேட்டால் மனதிற்கு இதமாக இருக்கும்....!!
இப்படி எனக்கு ரொம்ப பிடித்த பாடல்கள் இவை. நீங்களும் கேட்டுப்பாருங்கள்..
படம்:அமராவதி
பாடியவர்:மின்மினி
இசை: பாலபாரதி
படம்:பூவெல்லாம் கேட்டுப்பார்
பாடியவர்: ஸ்ரீநிவாஸ்
இசை:யுவன்சங்கர்ராஜா
படம்: பம்பாய்
பாடியவர்: அனுபாமா
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பறவாயில்லை முகமூடியோடையே வரலாம் வாங்கோ...! நான் வாசித்தவை, யோசித்தவை, நினைவுகள், நிஜங்கள் என்பவற்றோடு..உங்கள் கருத்துக்களும் இங்கு தூறல்களாக...
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
வணக்கம் vasaki பதிவுலகம் அன்புடன் வரவேற்கிறது . தமிழ்மணத்திலும் இணைந்தீர்கள் என்றால் உங்களுடைய பதிவு பலரை சென்றடைய வாய்ப்பு இருக்கிறது.
நன்றி சின்னக்குட்டி அங்கிள்,
தமிழ் மணத்தில் இணைந்து விடுகிறேன்...
vaasaki 3vathu song ku vadiva link kudukella pola play panatham!
சினேகிதி எனக்கு வேலை செய்யுது. ரண்டு மூண்டு தரம் கிளிக் செய்ய வந்திச்சு. நீங்களும் முயன்று பாருங்கோ.
Post a Comment